'இது போதும்னு நினைக்கிறாரா?'
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார்; சமீபத்தில் இவர் சிவன்மலையில் பிரச்சாரம் செய்தார்.
சாமிநாதனை ஆதரித்து, ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பேசுகையில், 'நம் வேட்பாளரை வெற்றி பெற செய்ய, இளைஞர்கள் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இரண்டு முதல் ஐந்து ஓட்டுகள் நாம் முன்னிலை பெற வேண்டும். அப்போது தான், நாம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற முடியும்' என்றார்.
இதை கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'காங்கேயம் தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகள் இருக்கு. ஒரு ஓட்டுச்சாவடியில இரண்டு முதல் ஐந்து ஓட்டுகள் முன்னிலை என்றாலும், 716 முதல் 1,590 ஓட்டுகள் தானே கூடுதலா வரும்... இந்த ஓட்டுகள் வித்தியாசத்துல அமைச்சர் ஜெயிச்சா போதும்னு எம்.பி., சொல்றாரா...?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.
காங்கேயம் தொகுதியில் ஒவ்வொரு இளைஞரும் இரண்டு முதல் ஐந்து திருட்டு ஓட்டுக்கள் விழ வைக்க வேண்டும் என்பதைத்தான் மறைமுகமாக ஈரோடு MP பிரகாஷ் உணர்த்தியுள்ளார். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
ஒருவேளை அத்தனை ஓட்டுகள்தான் விழப்போகிறதோ என்னவோ?