தி.மு.க., துண்டு போட மறுத்த சிறுவனுடன் வேட்பாளர் வாதம்
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், தி.மு.க., சார்பில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., பிரபாகரராஜா போட்டியிடுகிறார். பிரசாரத்தின்போது, தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுக்கு, தி.மு.க., துண்டு அணிவித்தார். ஒரு சிறுவன், துண்டை அணிய மறுத்து, 'நான் த.வெ.க.,' என்றார். அதிர்ச்சி அடைந்த பிரபாகரராஜா, அச்சிறுவனை விவாதத்துக்கு அழைத்தார்.
'நான் வெற்றி பெற்றால், நீ தி.மு.க., துண்டை அணிய வேண்டும்; உங்கள் கட்சி வென்றால், நான் த.வெ.க., துண்டை அணிவேன்' என தெரிவித்தார். அச்சிறுவனும், 'ஓகே' என சவாலை ஏற்றான்.
'தற்போது, உங்களுக்கு பத்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்துவேன் என்கின்றனர். ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்கின்றனர். நாங்கள், இருமொழிகள் போதும்; விரும்பினால் மூன்றாவது மொழி படிக்கலாம் என்கிறோம்.
'மூன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்னாகும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வர். இதுபோன்ற சட்டங்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். ஆனால், உங்கள் த.வெ.க., தலைவர் வாய்மூடி இருந்தார். அப்போ, ஸ்டாலின் நல்லவரா; விஜய் நல்லவரா' என, அந்த சிறுவனிடம் வேட்பாளர் கேட்டார்.
சிறுவனோ, 'ஸ்டாலின் தான்' என்றார். 'அப்போ யாருக்கு ஓட்டு போட வேண்டும்' என்றபோது, 'ஸ்டாலினுக்கு தான்' என்றான் சிறுவன். உடனே, அந்த சிறுவனின் கழுத்தில் தி.மு.க., துண்டை அணிவித்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
தி.மு.க., வேட்பாளரின் சவாலை தைரியமாக ஏற்ற சிறுவனை, த.வெ.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், 'களத்தில் பணியாற்றி, கொள்கைகளை கொண்டு சேர்ப்பதில் தி.மு.க.,வே சிறந்தது' என, அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
விவரம் தெரியாத திமுகவினரில் இந்த ஆளும் ஒன்று...
1960களில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் ஹிந்தி எப்படி சொல்லித் தரப்பட்டது தெரியுமா?
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக இருந்தது... அதே வேலையில் ஹிந்தியில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை..
அப்போதெல்லாம் இப்போது போல் ஆள் பாஸ் எல்லாம் கிடையாது. நன்றாக படித்தால் மட்டுமே ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்கு கூட செல்ல முடியும்.
ஆனால் அப்போது ஹிந்தியைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி கட்டாயம் என்று இருந்தது....
ஹிந்தியை மட்டும் படித்தால் போதும். தேர்ச்சி கட்டாயம் இல்லை.. என்ற நிலை தான் இருந்தது. மாணவர்களுக்கு சுமையே கிடையாது.
ஆனால் திமுக ஹிந்தியை எதிர்க்க மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆட்சி பிடித்தது..
இன்று அவர்களின் வாரிசுகள் ஹிந்தி படிக்கிறார்கள்...
இதனாலேயே இந்த ஆட்சி ஒழிய வேண்டும்...
நாடகம் திமுக வாடிக்கை.
It is a clear ugly drama. That fellow was contacted a few days back earlier by a few party activities, I understand, for this dirty trick
ஒரு சின்னப்பயல் கிட்ட விவாதமா? சீமான், அண்ணாமலை போன்றோரிடம் விவாதம் செய்யேன்
அறிய வயசு பையன்னா இப்படியா பண்றது, எனக்கென்னமோ இது ட்ராமா மாதிரி தெரியுது இவனுங்களே வீடியோ எடுத்து இப்படி மேய விட்டுரானுங்கன்னு தெரியுது, எங்க போய் முடியுமோ
மீடியா மட்டும் இல்லைன்னா சிறுவன் அடித்தே மெல்லப்படுவான் ....
விபரம் அறியாத சின்ன பசங்கள ஏமாற்றி பிழைக்கும் அளவுக்கு இறங்கி விட்டார்கள் மானங்கெட்ட திமுகவின்ர்
இவன் தான் உண்மையான சுயமரியாதையுள்ள ஆண்சிங்கம். அவன் சின்னக் குழந்தை, அவனுக்கென்ன தெரியும்? அவனைப் போய் அழிவுச் சக்தி என்று ஒரு வாசகர் குறிப்பிட்டுள்ளார். அப்படிச் சொல்லவேண்டாம்.
எப்படி ஏமாற்றுவது என்பது இவிங்களுக்கு கை வந்த கலை
10 வகுப்பு மாணவரை ஆங்கில கலக்காமல் பேச முடியுமா. இலங்கை மலேசியா சிங்கப்பூர் தமிழர்கள் ஆங்கிலத்தை கலக்க மாட்டார்கள். ஸ்டாலின் உதயநிதி பேசும் போதே வரிக்கு வரி ஆங்கிலம் பேசுகிறார்கள்.மேலும்
-
வீட்டில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: மணிப்பூரில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
-
அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!
-
வெனிசுலாவிலும் மவுசு உள்ளது :அமெரிக்க அதிபரின் காமெடி
-
வங்கதேசம் போராட்டத்தை துாண்டியதாக முன்னாள் சபாநாயகர் கைது
-
லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தது காஷ்மீர் போலீஸ்
-
மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு