பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
சிவகங்கை:சிவகங்கை அருகே பனங்குடி பெரியநாயகி அம்பாள் கோயில் கும்பாபிேஷகம் ஏப்., 20 ல் நடைபெற உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. ஏப்., 15 அன்று காலை 7:15 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். ஏப்., 17 ல் முதல் கால யாக சாலை பூஜையும், அதனை தொடர்ந்து ஏப்., 19 ம் தேதி வரை இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.
ஏப்., 20 அன்று காலை 5:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, தீபஸ்தானம் நடைபெறும். அன்று காலை 9:20 மணி முதல் 10:27 மணிக்குள் புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் ராஜகோபுர, மூலஸ்தான கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். யாலை சாலை பூஜை நாட்களில் நாதஸ்வர இன்னிசை கச்சேரி, வேத மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறும். பனங்குடி மற்றும் நடராஜபுரம் திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ///
மேலும்
-
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்
-
தட்டாஞ்சாவடி மக்கள் மீது ரங்கசாமிக்கு நம்பிக்கை இல்லாமல் மங்கலத்தில் போட்டி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சாடல்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் சுல்தான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
-
வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்
-
சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
-
சாத்தான்குளம் சம்பவம் அருவருக்கத்தக்க குற்றம்; தமிழக காவல் துறைக்கே இது ஒரு களங்கம்