வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் அனைத்து கிராமங்களுக்கும் நேற்று பைக் பேரணி நடத்தி, இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காட்டேரி குப்பத்திலிருந்து பைக் பேரணியை துவங்கிய நமச்சிவாயம், லிங்காரெட்டிபாளையம், சந்தை புதுகுப்பம், சுத்துக்கேணி, வாதனூர், பி.எஸ் பாளையம், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு வழியாக திருக்கனூர் கடை வீதியில் பிரசாரத்தை முடித்தார்.
பிரசாரத்தில் அவர் பேசுகையில், 'மண்ணாடிப்பட்டு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தரமான சாலை வசதி, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக ரூ. 150 கோடி செலவிடப்பட்டுள்ளது. 4,150 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 3,932 குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.2500 பெற்று தரப்பட்டுள்ளது. காட்டேரிக்குப்பத்தில் ரூ. 3.50 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.
அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி கிடைத்திட மண்ணாடிப்பட்டு தொகுதி வளர்ச்சி அடைந்து எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும்
-
கோவில் நகரங்களில் வீரமணிக்கு அனுமதி இல்லை; பிரசாரத்துக்கு தடை போட்டது திமுக
-
ராணுவ தடகள வீரர்களுக்கான இளம் சிறுவர் தேர்வு முகாம்
-
தமிழக அரசின் தலைமை செயலர் மாற்றம் ; தேர்தல் ஆணையம் உத்தரவு
-
மாவட்டத்தில் இ-பாஸ் சோதனை பணியில் தொய்வு :இரவு, அதிகாலையில் ஏராளமான வாகனங்கள் வருகை
-
யானையிடம் உயிர் தப்பியவர் மருத்துவமனையில் அனுமதி
-
திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி திருவிழா