பிளேக் மாரியம்மன் கோவிலில் பாலாலயம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ். ரோட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, திருப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, பாலாலயம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement