பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் திறந்த வேனில் பிரசாரம்

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, இறுதிகட்டமாக திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். இவர், தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வந்தார்.

அவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அளித்தனர். ஓட்டு கேட்கும் போது அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த, ஜான்குமார் நான் வெற்றி பெற்று இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.

நேற்று தொகுதி முழுதும் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, திறந்த வேனில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement