ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதுடில்லி: சர்வதேச போர் பதற்றங்களுக்கு மத்தியில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் . இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அதன் படி , மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25%மாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (1)
raja - ,
08 ஏப்,2026 - 14:42 Report Abuse
எல்லாரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் வட்டி கூடுமோ என்று காரணம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்தான் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement