பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் :சப் கலெக்டருடன் எஸ்.பி., ஆலோசனை

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டருடன், போலீஸ் பார்வையாளர் மற்றும் எஸ்.பி., ஆலோசனை நடத்தினர்.

திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட போலீஸ் பார்வையாளரான டி.ஐ.ஜி., விக்காஷ் கத்தேரியா, எஸ்.பி., சாய்பிரனீத் ஆகியோர், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு குறித்து சப் கலெக்டர் ஆகாஷ் உடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் திண்டிவனம் (தனி) தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 6 பற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசித்தனர்.

தொடர்ந்து எஸ்.பி., நிருபர்களிடம் கூறுகையில், 'மாவட்டத்தில் பதற்றம் நிறைந்தவைகளாக 101 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸ் பார்வையாளருடன் அந்த ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சாரிக்கை குறித்து ஆலோசனை நடத்தினோம். அங்கு கூடுதல் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.

Advertisement