மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி



திருவண்ணாமலை, உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் திலீப், 33. இவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசூர் பகுதியிலுள்ள கல்குவாரியில் கடந்த, 15 நாட்களாக பணியாற்றி வந்தார்.


நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அங்கிருந்த மின் ஒயரை சுற்றிக் கொண்டிருந்தார். அந்த ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி, தீலிப் துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், திலீப் இறந்து விட்டதாக கூறினர். அனக்காவூர் போலீசார் திலீப் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement