கோடையிலும் தொடருது குடிநீர் 'லீக்'

விருதுநகர்: விருதுநகரில் கோடையிலும் தொடரும் குடிநீர் லீக் பிரச்னையால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

விருதுநகர் கச்சேரி ரோடு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அருகே நேற்று பைப்லைன் உடைந்து குடிநீர் வீணானது. கடந்த மாதம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் நிறுத்தப்பட்டது. அதன் பின் அடிக்கடி உடைசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டாலும், நகர் பகுதிகளில் இது போன்ற லீக் ஆவது தொடர்கதையாக உள்ளது. இதே பகுதியில் தொடர் லீக் ஏற்படுவதால் வரும் நாட்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக இதை சரி செய்ய முன்வர வேண்டும்.

Advertisement