ரூ. 12.91 கோடி கஞ்சா பறிமுதல் பெண் கைது

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில், 12.91 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் பயணி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து, சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மார்ச் 31ம் தேதி டில்லி வந்த விமான பயணியரிடம் வழக்கமான சோதனை நடத்தப்பட்டது.

ஒரு பெண் பயணி கொண்டு வந்திருந்த 13 பாலித்தீன் பைகளில், 1.2 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 12.91 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement