செல்வ முத்துக்குமரன்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், முருகப்பெருமான் செல்வ முத்துக்குமரனாக தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள, செல்வமுத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும் என்பதைப் போல, இக்கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்தால், செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

Advertisement