கும்மிடியில் ரூ.1.72 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து சென்ற, 1.72 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற, 1.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு, கும்மிடிப்பூண்டி சார் - கரு வூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement