தாழ்வாக செல்லும் மின் கம்பியால் காரணித்தாங்கலில் விபத்து அபாயம்

வ ண்டலுார் - வாலாஜாபாத் சாலை, ஒரகடம் அடுத்த காரணித்தாங்கலில் இருந்து பேரீஞ்சம்பாக்கம் பிரதான சாலை பிரிந்து செல்கிறது. பேரீஞ்சம்பாக்கம் கிராமத்திற்கு, இந்த சாலையோர மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கிறது.

இந்த நிலையில், காரணித்தாங்கலில் மின் கம்பி மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் மின் கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.

அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக உள்ள மின் கம்பியை உயர்த்தி அமைக்க மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மு.செல்வமணி, காரணித்தாங்கல்.

Advertisement