செங்கையில் 7 தொகுதிகளில் 113 பேர் போட்டி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியில், 113 பேர் போட்டியிட உள்ளனர்.

மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., பா.ம.க., - வி.சி., - த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாவட்டத்தில் 238 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில், 130 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 108 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நேற்று 17 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தற்போது சோழிங்கநல்லுார் சட்டச பை தொகுதியில், 27 பேர், பல்லாவரம் சட்டசபை தொகுதியில், 23 , தாம்பரம் சட்டசபை தொகுதியில் 15, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், 15, திரு ப்போரூர் சட்டசபை தொகுதியில் 11, செய்யூர் சட்டசபை தொகுதியில் 13, மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 9 என 113 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Advertisement