மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். நேற்று காலை துணை ஆணையர் செல்வி தலைமையில், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் லட்சுமி மாலா, ஜென்னி, ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 24 லட்சத்து 61 ஆயிரத்து 760 ரூபாய் ரொக்கமும், கோசாலை உண்டியலில் 59 ஆயிரத்து 230 ரூபாய் ரொக்கமும், 131 கிராம் தங்கம், 371 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement