வெயிலால் ஒரே 'பார்முலா'வை பின்பற்றும் வேட்பாளர்கள்

கம்பம்:வெயின் தாக்கம் அதிகமானதால் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தை ரத்து செய்யும் ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நான்கு முனை போட்டி நிலவுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வெயில் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. இதனால் வேட்பாளர்களின் பிரசாரத்தில் சிக்கல் நீடிக்கிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட நான்கு கட்சி வேட்பாளர்களுமே ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர். காலை 6:30 மணிக்கு பிரசாரத்தை துவக்கி 10:00 மணிக்கு முடித்து கொள்கின்றனர். 10:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை ஒய்வெடுக்கின்றனர். பின்னர் மாலை 5:30 துவக்கி இரவு 10:00 மணி வரை பிரசாரம் செய்கின்றனர். இந்த விசயத்தில் சூரிய பகவான் கருணை யால் நான்கு வேட்பாளர்களும் ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர்.

Advertisement