தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்

7

நமது நிருபர்




தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின், கொங்கு மண்டல விவசாய சங்கங்களின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மேட்டுப் பாளையத்தில் நடந்தது. இதில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:


விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க., நிறைவேற்றவில்லை. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை, தென்னங்கள் இறக்க அனுமதி என போராடுகிறோம். விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக தி.மு.க., செயல்படுகிறது.


விவசாயிகள் பிரச்னைக்கு போராடினால், தி.மு.க., அரசு குண்டர் சட்டத்தில் விவசாயிகளை கைது செய்கிறது. கள் இறக்கியவர்கள், மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஒரு கடனை கூட தன்னிச்சையாக மாநில அரசால், தள்ளுபடி செய்ய முடியாது.


நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தி, வேண்டும் என்றே மழையில் நனைய விட்டு, பின் அவை தீவனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சட்டசபையில் தி.மு.க., தீர்மானம் கொண்டுவந்தது. அதே சமயம் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில், கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தமிழக அரசு. நம் நெல்லை நேரடியாக சந்தைப்படுத்தினால், கமிஷன் வராது என்பதால் இவ்வாறு செய்கின்றனரா?


பாமாயில் இறக்குமதி செய்தால் கமிஷன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் விற்பனை செய்தால் கமிஷன் கிடைக்காது. தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால் அது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். கள் இறக்க அனுமதிப்போருக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement