காங்., எம்.பி., உட்பட 226 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி: ஆலங்குளம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட காங்., எம்.பி., உட்பட, 226 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தென்காசி மாவட்டம், மருதம்புத்துாரில் ஏப்., 7ம் தேதி, பனையேறி தொழிலாளி மணிகண்டன் காலில், எஸ்.ஐ., இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டார். இதில், காயமடைந்த அவர் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருநெல்வேலி காங்., - எம்.பி., ராபர்ட் புரூஸ், ஆலங்குளம் அ.தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன், நா.த.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, 15 பெண்கள் உட்பட, 226 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1,800 கோடி மதிப்பிலான அமெரிக்க ட்ரோன் மாயம்
-
ஐந்து ஆண்டுகளில் இல்லாத வாராந்திர வளர்ச்சி உயர்வுடன் நிறைவு செய்த பங்கு சந்தைகள்
-
தொடர்ந்து மூன்றாவது வாரமாக லாபம் கொடுத்து வரும் தங்கம்
-
என்.எப்.ஓ., மோதிலால் ஓஸ்வால் பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இ.டி.எப்
-
'பிராப்பர்ட்டி ஷேர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்'
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 73.48 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி
Advertisement
Advertisement