மாற்றத்திற்கான தேர்தல்; களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்; தொண்டர்களுக்கு தெம்பூட்டிய விஜய்

12

சென்னை: இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கானது. களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கட்சியின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்.

விசில் சின்னத்தில்




அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழக மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கட்சி வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டளிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.


இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள்.

மக்களை சந்தியுங்கள்




அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள்.

வலு சேருங்கள்




தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


@block_P@

நிபந்தனைகளுடன் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏப்ரல் 14ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் விஜய் பிரசாரத்திற்கு 15 நிபந்தனைகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அளித்தார். block_P



@block_G@

திடீர் ரத்து

கன்னியாகுமரியில் நாளையும் (ஏப்ரல் 12), கவரப்பேட்டையில் நாளை மறுநாளும் (ஏப்ரல் 13) விஜய் பிரசாரம் செய்ய போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டது. கவரப்பேட்டையில் வரும் ஏப்ரல் 19ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.block_G

Advertisement