தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்



பெருந்துறை, பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், குன்னத்துார், செம்மாண்டம்பாளையம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு, தென்முக வெள்ளோட்டை சேர்ந்த தேங்காய் வியாபாரி கவுரிசங்கர், பைக்கில் வந்தார்.


சோதனையில் அவரிடம், 94,300 ரூபாய் இருந்தது. தேங்காய் வாங்க குன்னத்துாருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement