திருமாவின் இன்றைய குறி விஜய்
சென்னை: தினம் தினம் எதிர்க்கட்சிகளை மட்டும் குறை கூறும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று (ஏப்ரல் 14) நிருபர்கள் சந்திப்பில், ''அதிமுக-பாஜ கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது தான் விஜயின் ஒரே நோக்கம்'' என தெரிவித்தார்.
சொந்த நிலைப்பாடு
தமிழக மக்களுக்கும் சங்பரிவார் அரசியல் பேசுகிற சக்திகளுக்கும் இடையே நடக்கிற மக்கள் யுத்தமாக இந்த தேர்தல் களத்தை நாங்கள் பார்க்கிறோம். ஒட்டுமொத்த தமிழக மக்கள் பாஜ, அதிமுக கூட்டணி செய்கிற மக்கள் விரோத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்.
ஆனால் விஜய் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில், அதிமுக, பாஜ அணிக்கு சாதகமான வேலையை செய்கிறார் என்பது எங்கள் யுகம். அவர் திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவருடைய சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர வைக்க பார்க்கிறார்.
காலூன்றுவதற்கு...
அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால் இந்த தேர்தலில் அது சாத்தியமா என்பது அவருக்கே தெரியும். அவருக்கே வெளிச்சம். அவர் திமுக ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டு, அவருடைய தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தும், திமுகவை வீழ்த்துவதன் மூலம் பாஜ, அதிமுக என்கிற சங்பரிவார் கைகள் தான், ஓங்கும் என்பது தெரிந்தும் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி தமிழகத்தில் காலூன்றுவதற்கு வழி வகுப்பதாக இருக்கிறது.
ஆட்சி பீடம்
சிவப்பு கம்பளம் விரிப்பதாக இருக்கிறது. எனவே தான் விஜயின் அரசியலை காட்டுகிறோம், அம்பலப்படுத்துகிறோம். அவர் அவரால் ஆட்சிக்கு வர முடியாது, இந்த தேர்தலில் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து இருந்தும் அவர் திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆகவே அவருடைய நோக்கம் தெளிவாக தெரிகிறது.
திமுகவை அப்புறப்படுத்தி விட்டு, அதிமுக, பாஜவை ஆட்சி பீடத்தில் அமர வைப்பது தான் என் ஒரே ஆசை என்று செய்தி தமிழக மக்களுக்கு சொல்கிறார். இதை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஏனய்யா உமக்கு ஓர் ஆசையிருக்கும்போது அவருக்கும் ஓர் ஆசை இருக்கக் கூடாதா உனது ஆசையும் அவரது ஆசையும் ஒன்றாகத்தானிருக்க வேண்டுமா இது சுந்தந்திரநாடு உமக்கு எவ்வளவு சுதந்திரம்
இருக்கின்றதோ அதே அளவிற்கு அவருக்கும் சுதந்திரம் உள்ளது என்பதை புரிந்து செயல்படு.பெட்டிக்கக்காக்கவும் நாற்காலிக்காகவும் நீங்க ஆசைப்பட்டால் அது உமது தவறு விஜய் அப்படி அல்ல.
அவர் யார் கிட்ட எதற்க்காக சேர்ந்து இருக்காரு என்பது எல்லோரும் அறிந்ததே ..
அதற்கு ஏற்றால் போல் ஜால்ரா போடுகிறார்...வேறு என்ன செய்வார்..
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு டாஸ்மாக் குடியினால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தது இளைஞர் சமுதாயம் போதை வஸ்துக்களினால் சீரழிந்தது இரண்டு வயது சிறுமி முதல் 60 வயது பாட்டி வரை போதையினால் கற்பழிப்பு சம்பவம் நடக்கும் அநியாயம் நீட் தேர்வு ரத்து கல்வி கடன் ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சிலிண்டருக்கு மானியம் இதைப் பற்றி எல்லாம் என்றாவது பேசியிருக்கிறிரா. எதைக் கேட்டாலும் மதவாத. சக்தி உள்ளே வந்துவிடும் பாஜக வந்துவிடுமென்று பயமுறுத்தும் பழைய பல்லவியைத்தான் பாடிக்கொண்டு திமுகவின் கொத்தடிமையாகவே இருக்கிறீர்கள். மக்கள் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரட்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
தலைவரே, நீங்கள் எதற்கு தனி கட்சி வைத்திருக்கிறீர்கள், பேசாம தீமுகா வோடு இணைத்துவிட்டு திமுக என்று பேட்டி கொடுங்கள் .. வீசிகா என்று ஒரு தனி கட்சி எதற்க்கு ..
அப்படி ஒரு இயக்கம் இருப்பதாக காட்டி பெட்டி வாங்கலாம் . திமுகவில் சேர்ந்துவிட்டால் பெட்டி கிடைக்காது . திமுகவை மிரட்டவும் முடியாது . இவருக்குப்பின்னால் அந்த கட்சி தலைவர் யார் ? யாரையும் வளர்ந்துவிடாமல் பார்த்துகொள்கிறார் . திமுக இவர் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது
திமுக மட்டும்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நேரடியாகவே சொல்லி விடுங்களேன். உங்களால் முடியாததை மற்றவர்கள் செய்ய நினைக்கின்றார்கள். பாஜக, அதிமுக ஆட்சி அமைந்தால் அது மக்களின் தேர்வாகவே இருக்கும்.
இத்தோட இன்னிக்கான ஒப்பாரி ஓவர். நாளைக்கு காலைல வந்தடு.இப்ப காசை வாங்கிட்டு நடைய கட்டு. வேற எங்கயும் வாயை வாடகைக்கு விடாத.
நாளைக்கு கண்ணாடிய பாருல, அதுல தெரியற பொட்டி வாங்கிய பத்தி தாறுமாறா திட்டுல. அதுகப்புறம் உனக்கு பயத்துல அடுத்தவங்கள குறை சொல்றது குறையும்ல
பாவம் இங்கு கதறல் சத்தம் கேட்கும்போது மே 4 என்ன நடக்கபோகுது என்று தெரிந்து விட்டது , கோயல் உதயா முதல்வர் ஆக்க மாட்டேன் என்று சொல்லுங்கள் என்கிறார் , சாணக்கியர் இந்த சைடு வரவே மாட்டேங்கிறார் , வில்லிவாக்கம் சைஸ் பாண்டி க்கு வரும் பேசப்பி தமிழ்நாடு என்றாலே அலறி ஓடுகிறார்கள் , கேரளா கூட போகிறார்கள் ஆனால் TN என்றால் ஓடுகிறார்கள்
கொஞ்சம் பின்னால் திரும்பி பாரு உன் ஆட்கள் எல்லோரும் விஜய் கட்சிக்கு ஓடிட்டாங்க..... நீ தனியா என்ன தவில் வாசிச்சுக்கிட்டு இருக்க..... பேசாம ஓடிடு
கூலிக்கு மாரடிப்பவர்கள் இப்படித்தான், பாடி காட்டுக்கு போகிறவரை மைக் செட் போட்டு ஒப்பாரி வைப்பார்கள். அப்பால காச வாங்கிட்டு பஸ் ஏறிடுவாங்க
அய்யா நீங்கள் கண்ணாடி பார்த்து பேசி கொண்டு இருக்குறீர்கள்
நான் ஸ்டாலின் இல்லை
NOW ALSO STAND BEFORE THE MIRROR , வெய்யிலின் தாக்கம்
if you feel the heat go and lie down in cold storage. No hell will ever stop you and your leader to stand before the mirror . Now the question is how you are going to fare after standing before the public. Wait for May 4th.மேலும்
-
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்
-
தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்
-
ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்: சி.இ.ஓ.
-
பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
-
தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி