தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளில்லை
வால்பாறை: வால்பாறை தாவரவியல் பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிகளை தொடர்ந்து, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் அதிக அளவில் வால்பாறை வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் பூங்காவில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
வால்பாறை நகரில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவில், கேண்டீன் இருந்தும் பயன்பாட்டில் இல்லை. பூங்கா புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் உள்ளே செல்லவே சுற்றுலா பயணியர் அச்சப்படும் நிலை உள்ளது.
தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்கும் படியாக மலர் செடிகள் இல்லை. குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மே மாதம் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருவர். அதற்கு முன்பாக, பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்