பாகிஸ்தான் ரூ.28,000 கோடி கடன் சவுதி அரேபியா உறுதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, சவுதி அரேபியா கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகளிடமும், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கடன் பெற்றுள்ளது.
தற்போது பாகிஸ்தானுக்கு, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே உறுதியளித்த 42,000 கோடி ரூபாயுடன், கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
இதனை பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசேப், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த செப்டம்பரில் இரு நாடுகளும் முக்கியமான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி பாதுகாப்பு உதவி செய்கிறது. அதற்கு பதிலாக சவுதி அரேபியா பொருளாதார உதவி அளிக்கிறது.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்