ஆம்னி பஸ் - பைக் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு
சாத்துார்: பைக் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர்கள் கோகுல், 17, பிரசன்னா, 17, யுவராஜ், 17. மூவரும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, பைக்கில், உப்பத்துாரில் உள்ள பால்பண்ணைக்கு சென்றனர். அங்கு, டீ குடித்து விட்டு இரவு, 11:30 மணிக்கு கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழி சாலையில், எதிர் திசையில் பைக்கில் வேகமாக சென்றனர்.
சாத்துார் பெரிய கொல்லப்பட்டி விலக்கு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரில் வந்த ஆம்னி பஸ், இவர்களின் பைக் மீது மோதியது. இதில், பிரசன்னா, யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கோகுல் உயிரிழந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
தேர்தலுக்கு 7 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
-
மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி
Advertisement
Advertisement