திரவுதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணிதிருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முதல்கால ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது.
திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலின் திருப்பணிகள் ஒரு மாதமாக நடந்து வந்தது. தற்போது திருப்பணிகள் முடிந்து நேற்று மாலை கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.
இதற்காக கோவில் வளாகத்தில், 5 யாகசாலைகள் அமைத்தும், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 கலசங்கள் வைத்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.
இன்று மதியம், மூன்றாம் கால பூஜையும், இரவு, நான்கு கால பூஜையும், நாளை காலை. 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
★★
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு
Advertisement
Advertisement