ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்

1


குளித்தலை, குளித்தலையில், ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய பின், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ், 37. இவர் குமரன் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், கரூரிலிருந்து திருச்சி நோக்கி பஸ்சில் வந்தபோது, குமாரமங்கலம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே திடீரென மனோஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்டு, விபத்து


ஏற்படாத வகையில் சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அவர், இருக்கையிலே மயங்கி விழுந்தார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள், நடத்துனர்ஆகியோர் டிரைவர் மனோஜூக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
குளித்தலை போலீசார் மனோஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த டிரைவர் மனோஜூக்கு, மனைவி கண்மணி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Advertisement