குமரியில் நாளை ராகுல் பிரசாரம்

நாகர்கோவில்: காங்., --- தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க., கூட்டணி சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்., வேட்பாளர்களாக குளச்சல் -- தாரகை கத்பர்ட், கிள்ளியூர் - ராஜேஷ்குமார், விளவங்கோடு -- பிரவீன் ஆகியோரும்; தி.மு.க., வேட்பாளர்களாக நாகர்கோவில் -- ஆஸ்டின், கன்னியாகுமரி -- மகேஷ் ஆகியோரும்; மார்க்சிஸ்ட் வேட்பாளராக பத்மநாபபுரத்தில் செல்லசாமியும் போட்டி யிடுகின்றனர்.

இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, காங்., -- எம்.பி., ராகுல் நாளை காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, குளச்சல் தொகுதியில் உள்ள லட்சுமிபுரம் கல்லுாரி மைதானத்திற்கு வருகிறார்.

அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில், காங்., -- தி.மு.க., மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேசுகிறார்.

Advertisement