விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 25 பேர் உயிரிழக்க காரணமான பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.


விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து உரிமையாளரான முத்துமாணிக்கம் தலைமறைவாக இருந்தார்.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறல் குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்து இருந்தார். இந்த சூழல் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Advertisement