மணல் கொள்ளையில் ரூ.5,000 கோடி சம்பாதித்த திமுக எம்எல்ஏக்கள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

27

தென்காசி: திமுக எம்எல்ஏக்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.5,000 கோடி சம்பாதித்து உள்ளனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.



தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடுஷோ நடத்தினார். அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதல்வரும், அவரது மகனுமே காரணம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மக்கள் உயிரிழந்தது திமுகவின் அரசின் அலட்சியத்தாலேயே நடந்தது.


திமுக எம்எல்ஏக்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.5,000 கோடி சம்பாதித்து உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்துவிட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.


நிதி மக்களுக்கு செல்லவில்லை. திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினரின் ஊழல் பணம் மீட்டெடுக்கப்படும். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தூத்துக்குடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்

வாசுதேவநல்லூர் தொகுதியில் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement