வைட்டமின் 'ப' வராததால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பரிதவிப்பு
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சி தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த அளவு வைட்டமின் 'ப' வராததால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும் களத்தில் பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த தேர்தலில், 167 இடங்களில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன் வாக்காளர்களை கவனிக்க, கட்சி தலைமையில் இருந்து வைட்டமின் 'ப' வரும் என, வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள 42 தொகுதிகளுக்கு, கடந்த 17ம் தேதி அமாவாசை அன்று, வைட்டமின் 'ப' வந்து சேர்ந்தது.
ஆனால், எதிர்பார்த்த அளவு வராததால், வேட்பாளர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும், 63 தொகுதிகளுக்கு, தலைமையிடம் இருந்து எந்த வைட்டமினும் இதுவரை வந்து சேரவில்லை. இதுநாள் வரை, தங்களிடம் இருந்த வைட்டமின் 'ப'வை வைத்து தேர்தல் பணிகளை சமாளித்தனர். ஆனால், வாக்காளர்களை கவனிக்க மேலிடத்தில் இருந்து வந்தால்தான், தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என, வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, மேலிடத்திற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் கேட்டபோது, 'கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்தாச்சு; இனி நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என வேட்பாளர்களுக்கு பதில் கிடைத்துள்ளது. சீட்டை உறுதி செய்ய, மேலிடத்துக்கு சில பைகளை, வேட்பாளர்கள் கொடுத்து வைத்தனர். அந்த பைகள், தேர்தல் நெருக்கத்தில் திருப்பி அளிக்கப்படும் என்று சொல்லியே வாங்கி வைக்கப்பட்டன.
ஆனால், சொன்னபடி அந்த பைகளும் வராததால், வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு வைட்டமின் 'ப' வராததால், கடைசி நேர கவனிப்புகளுக்குப் பின், வெற்றி கிட்டும் என்ற நிலையில் உள்ள தொகுதிகளும் கைநழுவும் நிலை ஏற்பட்டு, வேட்பாளர்கள் பரிதவிக்கின்றனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
காமராஜர் காலத்திலேயே விலைமதிப்பில்லா வாக்குகளை வைட்டமின் "ப" வுக்கு வாக்காளர்கள் திமுக வுக்கு விற்று உத்தமர் காமராஜரை தோற்கடித்தனரோ அன்றே தமிழ்நாடு அழிவின் பாதைக்கு செல்ல தொடங்கிவிட்டது. வைட்டமின் "ப" வுக்கு வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பில்லா வாக்குகளை விற்கும் வரை தமிழ்நாட்டை யாரும் காப்பாற்றமுடியாது.
எங்கள் வீட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை. தி மு க , ஆ தி மு க இரண்டும் அணிகளிலிருந்தும் பண பட்டு வாடா செய்யப்படாததினால் , யாருக்கு வாக்களிப்பது என்கிற குழப்பத்தில் எங்கள் வார்டு வாக்காளர்கள் உள்ளார்கள். தேர்தல் கமிசன் உடனடியக தலையிட்டு பணம் கிடைக்க உதவ வேண்டும்....
நோ துட்டு, நோ வோட்டு
வைட்டமின் பா, எல்லா தொகுதி மக்களுக்கும் வந்தாச்சு, பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் அஇஅதிமுக ஓட்டுக்கு 2000 வைட்டமின் ப வீடுதோறும் வழங்கபட்டாச்சு, திமுக சிலஇடங்களில் 2000 , சில இடங்களில் 1500 வைட்டமின் ப வை வீடுதோறும் வழங்கபட்டுவிட்டது
இந்த தேர்தலில் ஜாக்பாட் அடிக்கும் வாக்காளர்கள் லால்குடி தொகுதி தான், லீமாவின் கொடைத்தன்மை கால் லகரத்துக்கு வந்துவிட்டது , பிணையத்தொகை பெறுவது கடினம் , ஆனால் கரூரில் விஜயபாஸ்கரின் மூலம் 6000 மட்டுமே வந்துள்ளது. இது கடந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்ததைவிட குறைவுதான் என வாக்காளர்கள் குமுறுகிறார்கள்
உரைகல் டார்ச் லயிட் ஆகிவிட்டதா ?
தீயசக்தியும் கூட்டனிகளும் ஐந்து வருடமாக டாஸ்மாக்கில் குடித்து செய்யாத குற்றங்கள் அளவிடமுடியது, போதையினால் பள்ளி, கல்லுரி,கிராமஙக்கள் வரை விற்று கொலை,கொள்ளை,தலைமுறை தடுமாறி போகிறது, பெண்கள்,குழந்தைகள் ,பயமில்லாத சார்கள் மூலம் அச்சத்தில் வாழ்கிறார்கள்,வரி, ஏற்றத வரி எதாவது உண்டா, பால் விலையிலிருந்த தினசரி பொருட்கள் கடும் விலையேற்றம், வேலை வாய்ப்பு இல்லை, விவசாயம் படுக்க வைத்துவிட்ட இவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி , அதிமுக + தேச நலன் காக்கும் பாஜக கூட்டனி வெற்றி பெற வாக்கு செலுத்தும் நாள் 23 ஏப்ரல் வியாழக்கிழமை.
பணத்திற்க்காக வாக்குகளை விற்றால் பி.ஸ் வீரப்பாவின் வசனம் தான் ஞாபகம் வருகிறது - நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... ...
காசு கொடுத்தால்தான் வோட்டு என்றால் அது தேவை இல்லை .....அப்படி வோட்டு போட்டு கஞ்சா மெத்து கள்ள சாராயம் கொலை கொள்ளை கள்ள காதல் என்று சீரழியட்டும் .....மேலும் அடிபட்டால்தான் விழிப்பு வரும் ....
காசு வாங்கியவர்கள் உண்ணும் சோறு மீது, பிரியாணி மீது, பெற்ற பிள்ளைகள் மீது, தாலியின் மீது சத்தியம் செய்து விடுவார்களோ? இல்லையென்றால் காசு கொடுத்து வாக்கை உறுதி செய்ய இயலாது. மேலும் வாக்கு செலுத்தும் நபர்கள் உண்மையில் சரியானவரா என்று தீர விசாரித்து வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும்.மேலும்
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்-சேர்
-
செய்யூரை செழிக்க வைப்பதே என் வாழ்நாள் லட்சியம்: ராஜசேகர்
-
அமுலு பொன்மலரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்
-
திருப்போரில் அரசு மருத்துவமனை கொண்டு வருவேன்: பன்னீர்தாஸ் வாக்குறுதி
-
வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்