மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்-சேர்

செய்யூர்: செய்யூர் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அழைத்து செல்ல, வீல்-சேர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கு உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

செய்யூர் சட்டசபை தொகுதியில் 287 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

இந்த ஓட்டுச்சாவடிகளில், 85 வயதுக்கு மேல் உள்ள முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல், அவர்கள் சுலபமாக ஓட்டுச்சாவடிக்கு சென்றுவர வீல் - சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, செய்யூர் தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று வந்தது.

Advertisement