கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்

32

மதுரை: மதுரை மத்திய தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் தியாகராஜன், மல்லிகை சரத்தை கையில் சுற்றியபடி, ஓட்டளித்தார்.

அவரது வீடு, மதுரை வடக்குத் தொகுதி சின்ன சொக்கிக்குளத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள காக்கைப் பாடினியார் பள்ளி ஓட்டுச் சாவடிக்கு, வலது கையில் மல்லிகை பூச்சரத்தை சுற்றிய படி சென்று அவர் ஓட்டளித்தார்.

இது பற்றி, அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், 'ஓட்டுப்பதிவுக்கு முன், மீனாட்சி அம்மனை தரிசிக்க, அமைச்சர் தியாகராஜன் சென்றார். அங்கு, பிரசாதமாக கிடைத்த பூவை கையில் சுற்றியபடி ஓட்டுச்சாவடிக்கு வந்து விட்டார்' என்றனர்.

Advertisement