ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

5


டெஹ்ரான்: ஈரான் தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியிருந்தாலும், இந்தியர்கள் யாரும் அந்நாட்டு செல்ல கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஈரான் மற்றும் இந்தியா இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணிக்க கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள், பிராந்திய பதற்றம் முழுமையாக நீங்காததால் இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செல்வதை தவிர்க்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.



இது குறித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள், ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் அந்நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.


இந்தியா மற்றும் ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தியர்கள் வான்வழி மூலமாகவோ அல்லது தரைவழி மூலமாகவோ ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement