சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்
நமது நிருபர்
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக கூறி, போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இறந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், போலீசார் செல்லதுரை, வெயிலுமுத்து ஆகியோர் 2020ல் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 9 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக குற்றவாளிகள் 9 பேருக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
வாசகர் கருத்து (4)
Priyan Vadanad - Madurai,இந்தியா
24 ஏப்,2026 - 15:38 Report Abuse
இயற்கையாய் சாகும்வரை கோர்ட்டில் வழக்காடிக்கொள்ள உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பிட சட்டத்தில் இடமுண்டா? 0
0
Reply
மொட்டை தாசன்... - Port Louis,இந்தியா
24 ஏப்,2026 - 15:06 Report Abuse
இன்னும் பழங்காலத்து இந்தியா தண்டனை சட்டங்களில்நாள்தான் இப்படிப்பட்ட கொடுங்குற்றங்கள் செய்தவர்களை காப்பாற்றுகிறது . இதை தற்போதைய காலத்திற்கேட்ற்றவாறு மாற்றிஅமைக்கவில்லையெனில் குற்றங்கள் பெருகதான் செய்யும் . 0
0
Reply
spr - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 13:59 Report Abuse
கொலை செய்தவர்கள் என ஒரு நீதிமன்றம் தண்டனை கொடுத்தும் மேல்முறையீடு என்றெல்லாம் அனுமதித்தால் நீதிமன்ற விசாரணை எதற்கு முதலில் தீர்ப்பு தந்த நீதிபதி சட்டம் தெரியாதவரா? 0
0
Reply
Diraviam s - CHENNAI,இந்தியா
24 ஏப்,2026 - 12:20 Report Abuse
அப்பா , மகன் இருவருக்கும் எந்த அவகாசமும் தரப்படவில்லை .. 0
0
Reply
மேலும்
-
வெற்றி எப்படி ஜோதிடர்களிடம் தேடி செல்லும் வேட்பாளர்கள் திக்..திக்.. மனநிலையில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர்
-
தேர்தல் பரபரப்பு முடித்தது களை கட்டும் பந்தையம்
-
ரோட்டில் ஓடும் கழிவுநீர் பொதுச்சுகாதாரம் பாதிப்பு
-
வளைவு பகுதியில் பிளக்ஸ் விபத்து ஏற்படும் அபாயம்
-
சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திருஅவதார நாள் வேள்வி
-
திருத்தேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Advertisement
Advertisement