துபாய் புறப்பட்டார் உதயநிதி; கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்

69


சென்னை: சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். உதயநிதி வெளிநாடு சுற்றுப்பயணம் இன்று புறப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் இறங்கினர். தற்போது தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதிகளுக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.



தேர்தல் பணிகள் முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.

@twitter@https://x.com/ANI/status/2047538422118821996?s=20twitter

Advertisement