போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கோரிக்கை 

புவனகிரி: சிதம்பரம்- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், புவனகிரி வழியாக சேலம், கோயம்புத்துார், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, வடலுார் பண்ருட்டி உள்ளிட்ட மார்க்கங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன.

மேலும், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்வதால் புவனகிரி குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது வருகிறது.

இந்நிலையில் புவனகிரி மீன் மார்க்கெட்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரை உள்ள சாலையின் ஓரங்களில் லாரிகளை நிறுத்தி, லோடு இறக்குகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயில் நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement