என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் மோடி; மேற்குவங்க படகோட்டி பெருமிதம்

37

நமது சிறப்பு நிருபர்




என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் என பிரதமர் சவாரி செய்த படகினை இயக்கிய, 72 வயது மேற்கு வங்க படகோட்டி கவுரங்க பிஸ்வாஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை 7 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அங்குள்ள கங்கை நதியின் கிளையான ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார். அப்போது தான் எடுத்த புகைப்படங்களை பிரதமர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, 'கங்கை நதி மேற்கு வங்கத்தின் ஆன்மா வழியாக பாய்கிறது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

இங்கு படகு சவாரி செய்தது, கங்கை அன்னைக்கு என் நன்றியை தெரிவிக்க கிடைத்த வாய்ப்பு. இந்த பயணத்தில் வித்யாசாகர் சேதுவையும், ஹவுரா பாலத்தையும் மிக அருகில் ரசித்தேன்' என, குறிப்பிட்டிருந்தார். பிரதமர் சவாரி செய்த படகை இயக்கிய 72 வயதான கவுரங்க பிஸ்வாஸ் கூறுகையில், ''பிரதமர் மோடி என்னிடம் வந்து, வங்காள மொழியிலேயே என் பெயரை விசாரித்தார்.


எனக்கு ஹிந்தி மொழி சரளமாகத் தெரியாது; அதனால் நானும் வங்காள மொழியிலேயே அவருக்குப் பதிலளித்தேன். நதியின் மையப்பகுதிக்குச் சென்ற பிறகு, பிரதமர் மோடி அதிகம் பேசவில்லை.


நாங்கள் கரைக்குத் திரும்பிய பிறகுதான், அவர் என்னை அருகில் அழைத்து, மிகவும் அன்புடன் என்னை இறுகத் தழுவி கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்'' என்றார். அந்த 35 நிமிடப் படகு சவாரிக்கு, பிரதமர் படகோட்டிக்கு 1,000 ரூபாயைக் கட்டணமாக வழங்கினார்.



பிரதமர் வருகையின் போது, சவாரி செய்ய ஏற்பாடுகளை செய்த 44 வயதான படகோட்டி பிரபீர் பிஸ்வாஸ் கூறுகையில், ''காலை 7 மணி கடந்திருந்த நிலையில், சிலர் அங்கு வந்து ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்தனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பதை முதலில் ஏதும் சொல்லவில்லை.


பிரதமர் மோடி படித்துறையின் படிகளில் இறங்கி வருவதைக் கண்டபோதுதான், இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமையப்போகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று கூறினார்.

Advertisement