7 நீதிபதிகள்   இடமாற்றம்

கோவை: கோவையின் எம்.சி.ஓ.பி. சிறப்பு கோர்ட் நீதிபதி மோகன ரம்யா, சிவகங்கை சி.ஜே.எம். கோர்ட்டிற்கும், கமர்சியல் கோர்ட் நீதிபதி வேதகிரி, சீர்காழி சப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.

முதன்மை சப்-கோர்ட் நீதிபதி செந்தில்குமார், முதலாவது கூடுதல் சப் கோர்ட்டிற்கும், முதலாவது கூடுதல் சப்-கோர்ட் நீதிபதி கலைவாணி, இரண்டாவது கூடுதல் சப்-கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், சென்னை எம்.சி.ஓ.பி. சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். மூன்றாவது கூடுதல் நீதிபதி தமிழரசி, எழும்பூர் 14வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இரண்டாவது கூடுதல் சப்- கோர்ட் நீதிபதி தனலட்சுமி, மூன்றாவது கூடுதல் சப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.

Advertisement