அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பிறகு, இப்பகுதிகளில் தினசரி தொடரும் சாலை விபத்துக்களால் கடந்த சில ஆண்டுகளில், ஏராளமனோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.
மந்தாரக்குப்பம் கடைவீதி பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பு மற்றும் ஏராளமான குறுக்கு சாலைகளால் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் வாகன ஒட்டிகள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஒட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
இது குறித்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
போலீசார் தேசிய நெடுஞ்சாலை கடை வீதியில் சாலை அருகே கயிறு அமைத்து அதைத் தாண்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது; ரிப்ளக்டிங் ஸ்டிக்கர் ஒட்டுவது, பொதுமக்கள், மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வாகன விபத்துக்களை தடுக்க மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?