வழக்கமான ஓட்டுப்பதிவுதான்; வியப்படைய ஒன்றும் கிடையாது: கண்டுபிடித்தார் திருமா
சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடந்தது வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. எஸ்ஐஆர் மூலமாக ஏராளமான, லட்சக்கணக்கான ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த ஓட்டுகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து இந்த ஓட்டுப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே ஓட்டுப்பதிவு நடந்து இருக்கிறது என்று தான் பேசியிருப்போம்.
எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், இப்பொழுது கூடுதலாக ஓட்டுப்பதிவு நடந்து இருப்பது போல் தோற்றம் இருக்கிறது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாக்காளர்கள் 20 முதல் 25 லட்சம் பேர் இணைவார்கள். அதேபோல் இந்த தேர்தலிலும் 20 முதல் 25 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள், அவ்வளவு தான்.இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தில் இருந்து இதை நாங்கள் உணர்கிறோம். தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்று சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் வாங்கும் ஓட்டு சதவீதத்தை பொறுத்து தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன். அவ்வளவு தான், தேர்தல் முடிவு வரட்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (31)
பேசும் தமிழன் - ,
26 ஏப்,2026 - 10:14 Report Abuse
இல்லாத திருட்டு வாக்காளர்களை நீக்கி இருப்பது...... உண்மையான வாக்காளர்கள் மட்டும் வாக்களித்து இருப்பது நல்லது தானே.... அப்போது தானே உண்மையான மக்கள் சக்தி தெரிய வரும் !!! 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
26 ஏப்,2026 - 07:19 Report Abuse
மதசார்பற்ற என்ற பெயரில் எவ்வளவு ஏமாற்று வேலைகள் நிறைந்துள்ளன 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
25 ஏப்,2026 - 22:27 Report Abuse
வியப்புதான் இல்லையே அப்பறம் எடுத்துக்கு இந்த அலப்பறை. பிறகு என்னத்துக்கு நாங்கதான் ஜெயிப்போம் என்ற கூப்பாடு. மே 4 என் தேதி என்ன பேசப்போகிறாய் என பார்க்கத்தானே போகிறோம். 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
25 ஏப்,2026 - 20:44 Report Abuse
யோசிப்பாங்க உட்காந்து 0
0
Reply
Nesan - JB,இந்தியா
25 ஏப்,2026 - 20:04 Report Abuse
வழக்கமான ஓட்டுப்பதிவு, இதில் இருந்தே இவரது ஆழ்ந்த அரசியல் அனுபவம் பீறிட்டு அடிக்கிறது. உறுதியாக அரசியல் மாற்றம் வரும். இவர்களது கூட்டு ஆட்சி அமைக்காது. 0
0
Reply
chinnamanibalan - ,
25 ஏப்,2026 - 19:19 Report Abuse
தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம், சுமார் 70 லட்சம் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டை வாக்கு உள்ளவர்களை தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால், கடைசி நேரத்தில் கள்ள ஓட்டு போடுவது அடியோடு இந்த தேர்தலில் தடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது தெரிகிறதா தேர்தல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை, ஏன் சில கட்சிகள் கடுமையான எதிர்த்தன என்பது. 0
0
Reply
R SRINIVASAN - CHENNAI,இந்தியா
25 ஏப்,2026 - 19:19 Report Abuse
திருமாவின் கருத்து உண்மைதான் 0
0
sankar - trichy,இந்தியா
25 ஏப்,2026 - 20:04Report Abuse
சொல்லாதது திமுக தோல்வி 0
0
Reply
GMM - KA,இந்தியா
25 ஏப்,2026 - 18:41 Report Abuse
போன தேர்தலில் திமுக படு உற்சாகமாக இருந்தது. ஓட்டு மிஷினை மூன்று ஷிப்ட் போட்டு கட்சியினர் கண்காணிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். தற்போது சோர்ந்து காணப்படுகிறார்? அப்போது வாக்காளர் பட்டியலில் சீர் திருத்தம் இல்லை. தொகுதி வெற்றியை தீர்மானிக்க முடியும். தற்போது இறந்தவர், கள்ள குடியேறிகள், இரட்டை பதிவு வாக்குகள் அதிகம் நீக்கம். உண்மையான வாக்காளர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடிந்தது. தேர்தல் முடிவு தங்களை வியக்க வைக்கும் . 0
0
Reply
SRIRAM - kovai,இந்தியா
25 ஏப்,2026 - 18:24 Report Abuse
அண்ணே எலெக்ஷன் முடிஞ்சிருச்சு எல்லோரும் ஊட்டி கொடைக்கானல் துபாய் ன்னு போய்ட்டாங்க நீங்க மட்டும் இன்னும் போகல... போங்க அண்ணே ரெஸ்ட் குடுங்க.... 0
0
Venkatesh - Chennai,இந்தியா
25 ஏப்,2026 - 23:53Report Abuse
அவர் தான் வாயை வெளியே எடுக்கவே இல்லையே.... தன் கருத்தில் அவ்வளவு பக்குவமாக, தெளிவாக இருக்கிறாரே 0
0
திராவிடன், oonkoal - ,
26 ஏப்,2026 - 09:07Report Abuse
அண்ணா இவரும் உங்க பேச்சை கேட்டு போய் விட்டால் அப்புறம் அறிவாலயத்தை யார் காப்பது? 0
0
உள்ளே வெளியே மே நான்கு - ,
26 ஏப்,2026 - 09:10Report Abuse
இவரும் போய் விட்டால் அப்புறம் பா ஜா கா, ஆர் எஸ் எஸ், வடக்கன் ஆகியோர் உள்ளே வந்துடும்...அப்புறம் உங்களை யார் காப்பாற்றும்? 0
0
பேசும் தமிழன் - ,
26 ஏப்,2026 - 10:16Report Abuse
அறிவாலய எடுபிடி.... அறிவாலய வாசலில் காவலுக்கு இருப்பார் 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
25 ஏப்,2026 - 18:05 Report Abuse
போன தேர்தலில் கள்ள ஓட்டுகள் அதிகம் என்று பேசிக்கொள்கிறார்கள் ஆனால் இந்த தேர்தலில் அந்த கள்ளஓட்டு கண்கட்டி வித்தை பலிக்கவில்லை. ஆகவே இந்த தேர்தலில் போன தேர்தலை விட 8 முதல் 12 சதவிகிதம் வரை ஓட்டுக்கள் அதிகம். 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
Advertisement
Advertisement