இடியும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகாவில் பொன்னம்பட்டி, கிழவனேரி கிராமங்களுக்கான வி.ஏ.ஓ., அலுவலகம் கிழவனேரியில் உள்ளது.

கட்டப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கட்டடம் முழுமையாக சேதம் அடைந்து உள்ளது. பக்கவாட்டு சுவர்கள், துாண்கள், கூரை என அனைத்தும் பெயர்ந்து விழுந்து உள்ளன.

எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் முழுமையாக இடியும் என்ற நிலையில் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள், கிராம மக்கள் உயிரை கையில் பிடித்தபடி அலுவலகத்தில் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது.

உயிர் பலி ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வி.ஏ.ஓ., அலுவலகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். அல்லது மாற்று இடத்திலாவது புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement