ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
தமிழகத்தில் கடந்த, 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தி.மு.க., - அதி.மு.க., கூட்டணிகள், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி நிலவிய இத்தேர்தலில், 85.10 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது, 2021 தேர்தலை விட, 12.37 சதவீதம் அதிகம். அதேநேரத்தில், 2024 லோக்சபா தேர்தலை விட, 51 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.
தமிழகத்தின், 20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 51 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவானது ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. ஏனெனில், 2011 சட்டசபை தேர்தலில், அதற்கு முந்தைய, 2009 லோக்சபா தேர்தலை விட, 63.65 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகின. அதனால், தற்போது கூடுதலாக பதிவான ஓட்டுகள் என்பது, 2011 உடன் ஒப்பிடுகையில், இரண்டாவது இடம் தான்.
அதாவது, 2011 சட்டசபை தேர்தலில், 3.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்து, 78 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதன்பின், 2016 தேர்தலில், 4.35 கோடி பேர் ஓட்டளித்து, 70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அவற்றுடன் தற்போதைய சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், மாநிலம் இதுவரை கண்டிராத வகையில், 85.10 சதவீத ஓட்டுகள் பதிவாக இருப்பது தெரிகிறது.
'மாநிலத்தில் நல்லாட்சியை உருவாக்கவே, மக்கள் இந்த அளவுக்கு முன்வந்து ஓட்டளித்துள்ளனர்' என்று, ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இந்த தேர்தலில் களமிறங்கியதும், அவரது ரசிகர்களாக உள்ள இளைஞர்கள் பெருமளவில் முன்வந்து ஓட்டளித்ததுமே, ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்றும் கருதப்படுகிறது.
அத்துடன், தற்போதைய ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தாராளமாக வழங்கியதும் ஓட்டுப்பதிவு அதிகரிக்க காரணமாகும்.
மேலும், இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், புதிதாக சில லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் முதல் முறையாக ஓட்டு போடும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்ததும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம்.
அதே நேரத்தில், கூடுதலாக பதிவான ஓட்டுகள், எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையும், எந்த கட்சிக்கு பாதகமாக அமையும் என்ற விவாதங்களும் தலைதுாக்கியுள்ளன. அதற்கான உதாரணமாக, 2006 சட்டசபை தேர்தல் சுட்டிக் காட்டப்படுகிறது.
அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.மு.க.,வும் தனியாக களம் கண்டது. அந்தக் கட்சி, 8.38 சதவீத ஓட்டுகளை அப்போது பெற்றாலும், 32.64 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்த அ.தி.மு.க., தோல்வி அடையவும், 26.46 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்த தி.மு.க., 96 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கவும் காரணமாக இருந்தது.
அதாவது, தே.மு.தி.க., ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான ஓட்டுகளை பிரித்ததே, அ.தி.மு.க.,வின் தோல்விக்கான காரணமாக அமைந்தது. அதேபோன்ற நிலைமை, தற்போதைய தேர்தலில் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.
தேர்தல் பிரசார நேரத்தில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு தன்னெழுச்சியாக கூடிய கூட்டத்தை வைத்து, இப்போதைக்கு எதுவும் சொல் முடியாது. ஏனெனில், அவர் ஒரு நடிகர் என்பதால் தான், கூட்டம் கூடியதா அல்லது ஆதரவு தெரிவித்த கூட்டமா என்பது, தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும். எது எப்படியோ, விஜயின் வரவால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளின் ஓட்டுகள் சிதறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்படி ஓட்டுகள் பிரிந்திருந்தால், பல வேட்பாளர்கள், சில நுாறு அல்லது ஆயிரம் ஓட்டுகளில் தான் வெற்றி, தோல்வியை சந்திக்க நேரிடும். விஜயின் வருகை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது, மே, 4ல் தெரிந்து விடும். அதே நேரத்தில், ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி.
எலெக்ஷன் கமிஷன் மட்டும் SIR நடத்தலேன்னா இல்லாதவங்க ஓட்டுக்கள் 15% மொத்த வோட்டுல சேர்ந்திருக்கும். அதன்படி இப்போ பதிவான ஓட்டுக்கள் வெறும் 73% தான். ஆகவே, இது ஒன்றும் மிகப்பெரிய வரலாறு காணாத விஷயம் இல்லை.
ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், ஓட்டு சதவிகிதம் அதிகமாகத் தெரிகிறது. அதிகம் பேர் ஒட்டளித்ததாக ஒரு மாயை
விஜய் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இளஞ்சர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர் அந்த அளவிற்கு அரசியலில் முன்னிற்க முடியுமா? அவருக்கு அரசியல் அறிவு ஒரு சாதாரண குடிமகனுக்குள்ள அளவு கூட கிடையாது. யடிவரை முன்நிறுத்தி சிலரே பயனடையாளாம். அல்லது இவர் தீ மு காவின் பின்னணி என்றால் தேர்தலுக்கு பிறகு தீ மு க்கா வில் ஐக்கியமாகி விடுவார். கட்சிக்கும் கட்சி காரர்களுக்கும் ஜெயித்தவங்களுக்கு பூம் பூம் லக்க லக்க லாலி பப்பும் கொடுத்திடுவார்......... கொடுத்திடுவார் டூம் டூம் டம டம.
அண்ணாத்துரை அதன் பிறகு கருணாநிதி இவர்களின் பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தை நாம் இப்போது கண்டுகொண்டிருக்கிறோம். விஜய் போன்ற விசயமரியாத நபர்கள் வந்தால் அவர்கள் கற்றுக்கொண்டு திருட்டு திமுக அளவுக்கு அரசு செல்வங்களை சுரண்ட சிறிது அவகாசம் தேவைப்படும். அந்த அளவுக்கு மக்கள் நன்மை அடையலாமே? இதுவே திருட்டு கும்பல் தொடர்ந்தால், அவர்களுடைய அட்டகாசம் வேற லெவெலுக்கு போயிரும். 2006-11 ல அடிச்சதவிட 100 மடங்கு 2021-26 ல அடிக்கமுடியுதுன்னா 26-31ல ஆயிரம் மடங்கு அடிப்பானுங்க. அடுத்த தலைமுறையே அழிஞ்சிபோகும் நிலை ஏற்படும்.
ஒட்டு போட்டேன்னு பகுமானமாய் குரூப் செல்பி - இதுவும் தற்குறியின் ஒரு வெளிப்பாடு. இந்த தற்குறிகள் ஒட்டு போட்ட தலைவரா தமிழகத்தினை வழிநடத்த... தமிழகம் விளங்கிடும்.
ஓட்டு பதிவு சதவீதம் அதிகரிக்க SIR மட்டுமே காரணம் அதை என் புரிந்துகொள்ள முடியலவில்லை..2021 தேர்தலில் என் தெருவில் இறந்து போன 10 பேருக்கு ஓட்டு இருந்தது..ஒரு தெருவுக்கே இப்படின்னா நாடு முழுவதும் waste ஓட்டுக்கள் எண்ணிக்கையில் அடகாதவை...இப்பொழுது அந்த பெயர்களை நீக்கவும் சதீவிதம் அதிகரிச்சுருக்கு..2021 ம் ஆண்டிலே இதை செய்திருந்தால் நிச்சயம் அப்பொழுதே ஓட்டு சதவீதம் அதிகரிச்சிருக்கும்..
இதுதான் உண்மையான காரணம்! இதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஓட்டு சதவீதம் அதிகம் என்று உருட்டிக் கொண்டுள்ளது தமிழ் ஜனம்!