மாணவி ஓட்டிய கார் மோதி தந்தையுடன் சென்ற மகள் பலி

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மாணவி ஓட்டிய கார் மோதி, தந்தையுடன் சென்ற மகள் பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், சொரக்காயல் நத்தத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்தார்.

தந்தை முருகன், 44, தாயுடன், 'ஹூண்டாய்' காரை, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் வாணியம்பாடி நோக்கி ஓட்டி சென்றார்.

வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டியைச் சேர்ந்த சவுமியநாராயணன், 45, தன் மகள் பவித்ரா, 14, உடன், பைக்கில் சென்றார்.

அப்போது, பிளஸ் 2 மாணவி ஓட்டிச்சென்ற கார், பைக் மீது மோதியது. இதில், பவித்ரா உயிரிழந்தார். சவுமியநாராயணன் படுகாயமடைந்தார். அம்பலுார் போலீசார், மாணவி, அவரது தந்தை மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement