'டாப் 10' நிறுவனங்களின் ரூ.2 லட்சம் கோடி மாயம்

இரண்டு வாரங்களாக ஏற்றத்தை சந்தித்த பங்கு சந்தை, கடந்த வாரம் சரிவுடன் முடிவடைந்தது. இதனால், 'டாப் 10' நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2.05 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.

இதில், டி.சி.எஸ்., மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.

கடந்த வாரம் சென்செக்ஸ் 1,829.33 புள்ளிகளும், நிப்டி 455.60 புள்ளிகளும் சரிந்தன. மேற்காசிய போர் பதற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவே, இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், எஸ்.பி.ஐ., மற்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரம் உயர்ந்தது.

Advertisement