உற்சாகமாக குளித்த கோயில் யானை
ராமேஸ்வரம்: கோடை வெப்பத்தை தணிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி உற்சாக குளியல் போட்டது.
ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக வெப்ப சலனம் உள்ள நிலையில் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். வெப்பத்தால் கோயிலில் யானை ராமலட்சுமி பரிதவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள குளியல் தொட்டியில் நிர்வாகம் தண்ணீர் நிரப்பியதும், யானை தொட்டிக்குள் வலம் வந்து உற்சாகமாக குளியல் போட்டது. கோடை வெயில் ஜூன் வரை நீடிக்கும் என்பதால் யானை தினமும் சவர் பாத் மூலம் குளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சந்தை விலை நிலவரம்
-
3% வரை சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கி பங்குகள்
-
சிட்டி யூனியன் பேங்க் பங்கு 28% வரை உயர வாய்ப்பு காலாண்டு முடிவுகளுக்கு பின் 'சிட்டி யூனியன் பேங்க், எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்குகள் 28 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. 'சிட்டி யூனியன் பேங்க்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிட்டல்' 345 ரூபாயாகவும் (27 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 315 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளன. அதேபோல், '
-
24,200-க்கு மேலே சென்றால் ஏற்றம் வரக்கூடும்
-
தனியார் விடுதியில் தீ விபத்து; 50 பெண்கள் உயிர் தப்பினர்
-
என்.எஸ்.இ., முதலீட்டாளர் எண்ணிக்கை 13 கோடியானது
Advertisement
Advertisement