உற்சாகமாக குளித்த கோயில் யானை

ராமேஸ்வரம்: கோடை வெப்பத்தை தணிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி உற்சாக குளியல் போட்டது.

ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக வெப்ப சலனம் உள்ள நிலையில் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். வெப்பத்தால் கோயிலில் யானை ராமலட்சுமி பரிதவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள குளியல் தொட்டியில் நிர்வாகம் தண்ணீர் நிரப்பியதும், யானை தொட்டிக்குள் வலம் வந்து உற்சாகமாக குளியல் போட்டது. கோடை வெயில் ஜூன் வரை நீடிக்கும் என்பதால் யானை தினமும் சவர் பாத் மூலம் குளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement