போதையில் இருந்ததை கண்டித்த தந்தையை கொன்ற மகன் கைது

திருவாரூர்: குடிபோதையில், தந்தையை அடித்துக் கொன்ற மகன், நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர், கரிகாலன், 48; டிபன் கடைக்காரர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், இவரது மனைவி, தன் அண்ணன் வீட்டிற்கு, மகன், மகளுடன் சென்று விட்டார்.

பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்த மகன் ஸ்ரீகுமரன், 17, கல்லுாரிக்கு சரி வர செல்வதில்லை என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு, தந்தை வசிக்கும் வீட்டிற்கு, ஸ்ரீகுமரன் வந்தார். ஸ்ரீகுமரன் போதையில் இருந்ததை கரிகாலன் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீகுமரன், பீர் பாட்டிலால், கரிகாலன் தலையில் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, கரிகாலன் இறந்தார்.

திருத்துறைப்பூண்டி போலீசார், ஸ்ரீகுமரனை கைது செய்தனர்.

Advertisement