சட்டசபைக்கு மது அருந்தி வந்தாரா பஞ்சாப் முதல்வர்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
சண்டிகர்: பஞ்சாபில் நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில், முதல்வர் பக்வந்த் மான் மதுபோதையில் பங்கேற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
பஞ்சாபில் இருந்து தேர்வான ஆம் ஆத்மி எம்பிக்கள் 8 பேர் பாஜவில் இணைந்தனர். அம்மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பகவந்த் மான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் முதல்வர் பகவந்த் மான் மதுபோதையில் பங்கேற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
சட்டசபை துவங்கியதும், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், முதல்வர் சட்டசபைக்கு மதுபோதையில் வந்ததாக குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும். முதல்வருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டு வந்துள்ளது. உண்மையை கண்டறிய அனைத்து எம்எல்ஏக்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் சட்டசபையில் முதல்வர் குறித்த வீடியோவை வெளியிட்ட தீவிர குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சட்டசபைக்கு போதையில் வந்த பகவந்த் மானின் செயல், வெட்கக்கேடானது. முதல்வரின் நடவடிக்கையை பொது மக்கள் தீவிரமாககண்காணிப்பதுடன், அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். உண்மையை வெளிக் கொண்டுவர பகவந்த் மான், பரிசோதனைக்கு உட்பட வேண்டும் எனக்கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பிரச்னை பெரிதானததை தொடர்ந்து பகவந்த் மான் கூறுகையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிட்டு, அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால், மதுபோதை குறித்த குற்றச்சாட்டு குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
பஞ்சாபி முதல்வர் பகவத் மான் ஏற்கனவே ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் வாக்குவாதம் செய்து கும்மாளம் அடித்தது நினைவிற்கு வருகிறது இதுபோன்று மக்களின் மாநில அரசின் பிரதிநிதி குடித்துவிட்டு சட்டசபைக்கு வந்தால் சபையில் உள்ள அனைவருக்குமே மது வழங்கி மது சட்டசபை என்ற பெயர் வைக்கலாமே அரசியலில் வெட்கக்கேடு
குடிகாரன் பேச்சு , பொழுதுவிடிஇன்ச்சா போச்சு ....யிற்கனவே அடிபட்டது ....பஞ்சாபுக்கும் , மஞ்சள் டீர்பன் வந்த சோதணை ....
இவர் ஏற்கனவே ஜெர்மனிக்கு அரசுப்பயணம் செல்லும்போது - குடிபோதையில் தள்ளாடியள்ளார்
அப்போது இவரை ஜெர்மனி திருப்பி இந்தியாவிற்கு அனுப்பித்தது
கெஜ்ரிவாலுக்கு ஜால்ரா போடுபவன் - ஒன்று CRIMINAL ஆக இருக்கணும் அல்லது இவரைப்போல் குடிகாரன்
தி.மு.கவின் டாஸ்மாக் மதுக் கொள்கையால் தமிழக மக்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முதல்வரே தள்ளாடுகிறார். தி.மு.க, ஆம்ஆத்மி, ஸ்டாலின், கெஜ்ரிவால் நல்ல கொள்கைக் கூட்டணிதான்.
இவரு யாரையாவது ஒத்தை விரலை நீட்டி கண்கள் சிவக்க நாக்கை மடக்கி பேசினாரா
ஜனநாயக நாட்டில் அரசு மது விற்கலாம் ஆனால் குடிக்கக் கூடாது என்று சொல்வது எதேச்சாதிகாரம்
ஆம்ஆத்மி யின் மேக்கப் கிழியத் தொடங்கி விட்டது. இதுதான் ஆம்ஆத்மி யின் மதுபானக் கொள்கை. தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி.
சர்க்கார் மாறத் துவக்கமோ?
இந்த ஆள் சரியான போதை ஆசாமி.வெளி நாட்டிலேயே இந்த ஆள் குடித்து விட்டு விமான நிலையத்தில் அசிங்கமாக தள்ளாடியது ....மேலும்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்