வீட்டில் பதுக்கிய மது தொழிலாளிக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த கரிக்கல்நத்-தத்தை சேர்ந்தவர் குமரேசன், 40, தொழிலாளி. இவர் அரசு மது-பானத்தை அதிகளவில் பதுக்கி, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவுப்படி, டி.எஸ்.பி., ராமச்சந்-திரன் மேற்பார்வையில் குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்-குமார் தலைமையிலான போலீசார், சோதனை நடத்தினர். இதில், குமரேசன், 40 பெட்டிகளில், 314 லிட்டர் மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, கார் ஒன்றையும், மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement