தொழிலதிபரின் ஆதார் எண்ணை மாற்றி பணத்தை சுருட்டியது மோசடி கும்பல்: ஏ.ஐ., போலி வீடியோவால் விபரீதம்
ஆமாதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, 'மொபைல் போன்' எண்ணை மாற்றி, 25,000 ரூபாய் கடன் பெற்று மோசடி நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த ஒருவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்கிறார்.
இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக வங்கியில் இருந்து வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் குறுஞ்செய்திகள் வருவது நின்றுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த அதிர்ச்சிகரமான மோசடி அம்பலமானது.
இது குறித்து ஆமதாபாத் சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறிய தாவது:
ஆமதாபாதைச் சேர்ந்தவர்கள் கனுபாய் பார்மர், ஆசிஷ் வானந்த், முகமது கைப் படேல் மற்றும் தீப் குப்தா.
இதில் ஒருவர் இ - சேவை மையம் நடத்தி வந்தார். இவர்கள் தொழிலதிபர் ஒருவரின் ஆதார் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்துள்ளனர்.
அதை வைத்து, 'டீப் பேக்' எனப்படும் தத்ரூப போலி வீடியோவை உருவாக்கி உள்ளனர். இதை, இ -- சேவை மையத்தில் உள்ள ஆதார் கருவியில் காட்டி, நேரில் ஆள் இருப்பது போல் ஆதார் மென்பொருளை நம்ப வைத்துள்ளனர்.
இதன் மூலம் ஓ.டி.பி., இல்லாமலேயே தொழிலதிபரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண்ணை மாற்றினர். அதற்கு பதில் அவர்களது எண் ஒன்றை அந்த ஆதாருடன் இணைத்தனர்.
அதன்பின், 'ஜியோ பேமென்ட்ஸ்' எனப்படும், 'ஆன்லைன்' வங்கியில் கணக்கு துவங்கி, 25,000 ரூபாய் கடன் பெற்றுள்ளனர். மேலும், தொழிலதிபரின் டிஜிட்டல் லாக்கரை அணுகி பல்வேறு ஆவணங்களை எடுக்க முயற்சித்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
வெறும் 25 ஆயிரமா >> >>
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, மொபைல் போன் எண்ணை மாற்றி 25,000 ரூபாய் கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. இதை, இ சேவை மையத்தில் உள்ள ஆதார் கருவியில் காட்டி, நேரில் ஆள் இருப்பது போல் ஆதார் மென்பொருளை நம்ப வைத்துள்ளனர்.// ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்-ஐ மாற்ற, இதற்கு முன்பு, கைவிரல் ரேகையை சரிபார்க்கும், Bio-Metric Based Identity Verification முறை இருந்தபோது, இது போன்ற தவறுகள் நிகழவில்லை. ஆனால், கடந்த சில மாதம் முன்பு, மொபைலில் உள்ள முன்பக்க கேமரா வழியாக, Aadhaar Face Recognition Identification முறை மூலம், வீட்டில் இருந்தபடியே ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்-ஐ Aadhaar என்ற மொபைல் ஆப்பில் உள்ள Service தேர்ந்தெடுத்து Update Mobile Number கிளிக் செய்து நம்பர்-ஐ மாற்றலாம் என்று, புதிய முறை கொண்டுவந்தனர். அந்த புதிய திட்டம் படுதோல்வியை முடிந்துள்ளது என்பதற்கு அச்சாரம் தான் இந்த செய்தி. பழையபடிக்கு, பொதுமக்கள் ஆதார் சேவை மையம் சென்று, தங்கள் கைவிரல் ரேகையை வைத்துத்தான், Bio-Metric Based Identity Verification முறை மூலம், மொபைல் நம்பர்-ஐ மாற்ற முடியும் என்ற விதியை, மீண்டும் அமல்படுத்துங்கள். Face Recognition Identification முறை-யை நீக்குங்கள்.
adhar சேவை மையங்களை அரசே தபால்துறை ம்ஓலம் நடத்தலாம் தவறு நடந்தால் பணிநீக்கம் செய்தால் ஒழுங்கா இருக்கும்
வெறும் 25000 இவ்வாவு வேலையா ?
அமைதி மார்க்கத்துக்கு சந்தோஷ செய்தி..மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு